தமிழில் பெரிய கவிஞர்களுக்கு எண்ணற்ற புனைபெயர்கள் உண்டு. இத்தொகுப்பில் முக்கிய தமிழ்க் கவிஞர்களின் புனைபெயர்கள் எனப்படும் சிறப்பு பெயர்களை காண்போம்.
1. கவியரசர் – கண்ணதாசன்
2. கவிப்பேரரசு – வைரமுத்து
3. கவிராட்சசர் – ஒட்டக்கூத்தர்
4. கூலவாணிகன் – சீத்தலைச் சாத்தனார்
5. மதுரகவி – பாஸ்கரதாஸ்
6. பாவலரேறு – பெருஞ்சித்திரனார்
7. பண்டிதமணி – கதிரேசஞ் செட்டியார்
8. பன்மொழிப் புலவர் – கா.அப்பாத்துரையார்
9. அழுது அடியடைந்த அன்பர் – மாணிக்கவாசகர்
10. தமிழ் தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர்
11. கவிச்சக்கரவர்த்தி – கம்பர்
12. தேசிய கவிஞர் – பாரதியார்
13. கவியோகி – சுத்தானந்த பாரதியார்
14. உவமை கவிஞர் – சுரதா
15. பாவேந்தர் – பாரதிதாசன்
16. மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
17.கவிமணி – தேசிக விநாயகம் பிள்ளை
18. காந்தியக் கவிஞர் – இராமலிங்க பிள்ளை
19.திராவிட சாஸ்திரி – பரிதிமாற் கலைஞர்
20. சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுப்பிள்ளை
21. மகாவித்துவான் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
22. புதுநெறி கண்ட புலவர் – இராமலிங்க வள்ளலார்
23. தமிழக வேர்ட்ஸ்வொர்த் – வாணிதாசன்
24. திரை கவித்திலகம் – மருதகாசி
25. பகுத்தறிவு கவிராயர் – உடுமலை நாராயணகவி
26. நாடக உலகின் இமயமலை – சங்கரதாஸ் சுவாமி
27. தமிழ் நாடக பேராசிரியர் – பரிதிமாற் கலைஞர்
28. தனித்தமிழ் இயக்கத் தந்தை – மறைமலை அடிகள்
29. பெருந்தலைவர் – காமராசர்
30. தமிழ் நாடக தந்தை – பம்மல் சம்பந்த முதலியார்
31. தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை – கந்தசாமி
32. அந்தகக் கவி – வீரராகவர்
33. தமிழக அன்னிபெசன்ட் – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
34. வைக்கம் வீரர் – தந்தை பெரியார்
35. தேசியம் காத்த செம்மல் – பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
36. இக்கால ஔவையார் – அசலாம்பிகை அம்மையார்
37.தென்னாட்டு ஜான்சி ராணி – அஞ்சலை அம்மாள்
38.கிறிஸ்தவ கம்பர் – எச்.ஏ.கிருட்டிணன் பிள்ளை
39. செந்தமிழ் ஞாயிறு – தேவநேய பாவாணர்
40. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி – ஆண்டாள்
41. சிறுகதை வேந்தர்-புதுமைப்பித்தன்
42.தென்னாட்டு பெர்னாட்ஷா – அறிஞர் அண்ணா
43. புதுக் கவிதையின் பிதாமகன் – ந.பிச்சமூர்த்தி
44. சிறுகதை தந்தை – வ.வே.சு.ஐயர்
45. திவ்ய கவி – பிள்ளை பெருமாள் ஐயங்கார்
46. இலக்கிய செல்வர் – குமரி அனந்தன்
47. ஆளுடைய நம்பி – சுந்தரர்
48. ஆளுடைய பிள்ளை – திருஞானசம்பந்தர்
49. வாதவூர் அடிகள் – மாணிக்கவாசகர்
50. திரையிசை திலகம் – கே.வி.மகாதேவன்