உலக தண்ணீர் தினம்: பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியமானது. தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் 22 மார்ச் 2023 ஆன இன்று, உலகெங்கும் ‘உலக தண்ணீர் தினம்‘ கொண்டாடப்படுகிறது.
உலக தண்ணீர் தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்ட ஆண்டு
உலக தண்ணீர் தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்ட ஆண்டு 1993 ஆகும். அந்தவகையில் மார்ச் 22 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2022 ம் தேதி உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக தண்ணீர் தினம் மையப்பொருள் – World Water Day Theme
ஐக்கிய நாடுகள் சபை உலக தண்ணீர் தினத்தின் ஒருங்கிணைப்பாளராக திகழ்த்துவருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினத்திருக்கான நோக்கம் மற்றும் குறிக்கோள் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்படும்.
அதன்படி 2023 ம் ஆண்டிற்கான உலக தண்ணீர் தினத்தின் நோக்கம் “accelerating the change to solve the water and sanitation crisis” என்பது குறிப்பிடத்தக்கது.